இந்தியாவில் ஒரேநாளில் 92,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியிருக்கிறது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 596 ஆக குறைந்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 69 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 2,219 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 1 லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 360 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்