இன்றைய நிலவரப்படி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 64 ஆயிரத்து 818 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரையில் நாடு முழுவதும் 2 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 85 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள்.
நேற்று ஒரேநாளில் 1,183 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,94,493 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதுடன் கொரோனா பாதிப்புடன் 5 லட்சத்து 95 ஆயிரத்து 565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்