Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யலாம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்றும்; சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rapid Urbanisation is Causing Heavy Rainfall Events Across South India, Finds Research | The Weather Channel - Articles from The Weather Channel | weather.com

வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்