இந்தியாவில் 81 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 58 ஆயிரத்து 419 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 965 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 1,576 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,86,713 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 87 ஆயிரத்து 619 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 009 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதிப்புடன் தற்போது 7,29,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரையில் நாடு முழுவதும் 27,66,93,572 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்