Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாஜகவில் சேர்ந்தது தவறான முடிவு: முன்னாள் திரிணாமூல் எம்எல்ஏ மம்தாவுக்கு மன்னிப்பு கடிதம்

பாஜகவில் சேர்ந்தது தவறான முடிவு, மீண்டும் கட்சியில் சேர விரும்புகிறேன் என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுக்கு தாவிய முன்னாள் திரிணாமூல் எம்எல்ஏ, மம்தா பானர்ஜிக்கு மன்னிப்பு கடிதம் எழுதியிருக்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காத காரணத்தால் பாஜகவில் இணைந்த முன்னாள் டிஎம்சி எம்எல்ஏ திபெண்டு பிஸ்வாஸ், பாஜகவில் சேர்ந்தது தவறான முடிவு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், "மனச்சோர்வு தருணத்தில்" கட்சி தாவும் முடிவெடுத்ததாகவும், இப்போது மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் சேர விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

திபெண்டு பிஸ்வாஸ் வடக்கு 24 பர்கானாஸ் பசிர்ஹத் தக்சின் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தேர்தல் நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் இமாலய வெற்றி பெற்ற பின்னர் இப்போது மீண்டும் பல முன்னாள் டி.எம்.சி தலைவர்கள், கட்சிக்கு திரும்புவதற்கான முயற்சியில் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்