"ஆட்டோ ஓட்டுநரான எனக்கு, இந்த கொரோனா காலத்தில் கால்களை இழந்துவிட்டேன். செயற்கைக் கால் பொறுத்த, பண உதவி தேவைப்படுகிறது. என் மகனும் பி.காம் வரை படித்திருக்கிறான். அவனுக்கு வேலை கிடைத்தாலும் உதவியாக இருக்கும்" – ராஜூ, சென்னை
"நான் தனியார் நிறுவனமொன்றில் காவலாளியாக இருந்தேன். என் மனைவிக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னைக்கு மருத்துவ உதவி தேவை. எனக்கும் தற்போது வேலையில்லை. அத்திவாசிய பொருள்கள், மளிகை சாமான்களுக்கு பொருளுதவியும் தேவைப்படுகிறது" – சிவக்குமார், சென்னை
"என் கணவருக்கு ஒரு கை செயலிழந்து விட்டது. எனக்கு, கைக்குழந்தை உள்ளது. எங்கள் மூவருக்கும், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தேவைப்படுகிறது" – கற்பக வேணி, ராமநாதபுரம்
"நான் சக்கரை நோயாளி. எனக்கு கட்டைவிரலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். வசதியின்மையால், அது செய்யமுடியாத நிலையில் இருக்கிறோம். எனக்கு, மருத்துவ உதவி தேவை" – வரதன், 84 வயது, திருவேற்காடு
"தனியார் பள்ளியொன்றில், ஆயாவாக வேலைப்பார்த்து வந்தேன். இந்த கொரோனா ஊரடங்கில், பள்ளிகள் திறப்பு இல்லாததால், பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். உணவுக்கே வழியில்லை. உணவு தேவைப்படுகிறது" – கஜலட்சுமி, மதுரை
"நாங்கள் தன்னார்வலர் குழு வைத்திருக்கிறோம். எங்களுக்கு உறுதுணையாக இருந்து, உதவி செய்யும் நபர்கள் யாரேனும் முன்வந்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு பண உதவி தேவைப்படவில்லை. பொருளுதவியே தேவைப்படுகிறது" – நாராயணன், திருவள்ளூர்.
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்