பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னையில் தடகள பயிற்சிக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரின் பேரில் பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டு கடந்த மே 29ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்