சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
கத்திரி வெயில் முடிந்த நிலையிலும், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், பின்னர் இரவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், வேளச்சேரி, வடபழனி, வண்ணாரப்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஒருசில இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 47 மில்லி மீட்டர் மழையும், தரமணியில் 24.5 மில்லி மீட்டர் மழையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்