டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் மிகப் பெரிய நம்பிக்கையாக இருக்கிறார் வினேஷ் பொகட்.
2016-ம் ஆண்டில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியிலேயே வினேஷ் பொகட் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் கால் இறுதிச் சுற்றுவரை வெற்றிகரமாக முன்னேறினார். இந்தச் சூழலில்தான் விதி விளையாடியது. சீன வீராங்கனை சுன் யனானுடன் மோதிக்கொண்டு இருந்தபோது, முட்டியில் காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினார் வினேஷ் பொகட்.
0 கருத்துகள்