Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கலப்புத் திருமண பணிநியமன முன்னுரிமை: முதல்வர் செயல்படுத்த விழுப்புரம் எம்.பி கடிதம்

கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை என 1986-இல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது பிறப்பித்த ஆணை, கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியால் நிறுத்தப்பட்டது. அந்த ஆணையை மீண்டும் செயல்படுத்துமாறு தமிழ்நாடு முதல்வருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில், “ தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப்பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களையும் சேர்த்து தமிழக அரசு 1986-ஆம் ஆண்டே ஆணையிட்டுள்ளது.

2006 முதல் 2011 ஆம் ஆண்டுவரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் கலப்பு திருமணம் செய்துகொண்டோர் 287 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக கலப்பு திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூகநீதியில் அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட உரிய ஆணையை வழங்கிடுமாறு வேண்டுகிறேன்” என தெரிவித்திருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்