Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: மேற்கு மண்டல கொரோனா பாதிப்பு -ஆலோசனை | மனிதனுக்கு பறவைக்காய்ச்சல்

இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு மண்டல கொரோனா பாதிப்பு -ஆலோசனை: மேற்கு மண்டலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து: கொரோனா காரணமாக சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தேர்வை எழுத விரும்பும் மாணவர்களுக்கு நிலைமை சரியானதும் வாய்ப்பு வழங்கப்படும் என விளக்கமளித்துள்ளார்.

+2 பொதுத்தேர்வு - தமிழக அரசு இன்று முடிவு: தமிழகத்தில் +2 பொதுத் தேர்வு குறித்து இன்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து புதிய தலைமுறையிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

குடும்ப வாழ்க்கை சிறக்க 'ஈகோ'வை கைவிடுங்கள்: தம்பதிகள் ஈகோ, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றை காலணி போன்று வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும் என்றும், குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுமாறும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடும் பணி தொடரும்: தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தது. அதனைத்தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மனிதனுக்கு பரவியது H10N3 பறவைக் காய்ச்சல்: மனிதனுக்கு முதல்முறையாக H10N3 என்ற பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனாவின் ஜென்ஜியாங் நகரில் 41 வயது நபருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பிணவறைக்குள் சென்று உறவினர்களே எடுத்து சென்ற விவகாரத்தில் ஊழியர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்து தேனி அரசு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிமுறைக்கு இணங்கியது டிவிட்டர்: மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா விதிமுறைகளுக்கு ட்விட்டர் இணங்கியது. நீண்ட இழுபறிக்குப் பின் சட்டத்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.

100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு: நியூசிலாந்து நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்