Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு, நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படுகிறதா என அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் இருந்து வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்தவர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தனர். அதனைத்தொடர்ந்து வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படுகிறதா என அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

மேலும், இந்த இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டால் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படுவர் என்றும், எனவே அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அரசாணை வெளியிட்டு 10.5% உள்ஒதுக்கீடு அமலுக்கு வந்தநிலையில் உயர் நீதிமன்றம் தற்போது கேள்வி எழுப்பி இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்