இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், 1983-ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த யஷ்பால் சர்மா காலமானார். அவருக்கு வயது 66.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் 1954ஆம் ஆண்டு யஷ்பால் சர்மா பிறந்தார். 1978ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். 1979ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக, முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார்.
0 கருத்துகள்