Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

7 வயதில் பெற்றோரை இழந்து தவித்த ரேவதியின் ஒலிம்பிக் பயணம்

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதான ரேவதி வீரமணி. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். ரேவதி குழந்தைப் பருவத்தில் 7 வயதை கடப்பதற்கு முன்னரே அவரது தந்தை வீரமணி வயிற்று பிரச்சினை காரணமாக இறந்துவிட்டார். அதில் இருந்து 6 மாதத்தில் ரேவதியின் தாய், மூளைக் காய்ச்சலால் இறந்தார். இதன் பின்னர் ரேவதியையும் அவரது இளைய சகோதரியையும் அம்மா வழி பாட்டியான ஆரம்மாள் தான் வளர்த்து, படிக்க வைத்தார். இதற்காக அவர் பண்ணைகளிலும், செங்கல் சூளையிலும் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்தார்.

குடும்ப சூழ்நிலையை நன்கு உணர்ந்தரேவதி பள்ளியில் படிப்புடன் ஓட்டப் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தினார். 2014-15-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்றமண்டல அளவிலான போட்டியில் ரேவதிவீரமணி வெறும் கால்களுடன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். அந்த போட்டியில் ரேவதி வெற்றி பெறவில்லை. எனினும் அவரது செயல்திறன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கே.கண்ணனை வெகுவாக கவர்ந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்