Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராமநாதபுரம்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஹபீப் முகம்மது மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகம்மது, மாணவிகளுக்கு செல்போனில் பேசி பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அவரை கடந்த மாதம் கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஹபீப் முகம்மது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி, ஆட்சியர் சந்திராகலாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஹபீப் முகம்மது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்