Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை படகிலிருந்து இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்த மீனவர்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொள்ள வந்தபோது, படகிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்தார்.

உப்பங்கழி ஏரியில், மண் அரிப்பு ஏற்படுவது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர், எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, 7பேர் பயணிக்கக்கூடிய படகில் அமைச்சருடன் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஒரு புறமாக சாயத் தொடங்கியதால் படகிலிருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, அமைச்சர் பயணித்த படகில் இருந்த சிலரை வேறொரு படகில் ஏற்றினர். அதன் பின்னர் முகத்துவாரம் பகுதியில் ஆய்வை முடித்துக்கொண்டு வந்த அமைச்சரை , மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்