Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசி வருகின்றனர்.
 
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
 
அதேபோல், அதிமுக.இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அரசியல் தொடர்பான சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்