சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை செய்ததற்கு பிரதமரிடம் நன்றி தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்று சந்தித்தப் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரதமரிடம் பேசியது என்ன என்பது குறித்து விளக்கினார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ''சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம்.
தண்ணீர் பற்றாக்குறையை போக்க கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை விரைந்து செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். அதிமுகவில் எந்த தொண்டருக்கும் அதிருப்தியில்லை'' என்றார். சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு, நன்றி எனக்கூறி விடைப் பெற்றார் எடப்பாடி பழனிசாமி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்