Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் வெளியேறிய தமிழக வீராங்கனை உருக்கம்

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது குறித்து தனது வருத்தத்தை தமிழக வீராங்கனை பவானி தேவி பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து பவானி தேவி தனது ட்விட்டர் பக்கத்தில், “ இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்றேன். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனையானேன். எனது இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்