இங்கிலாந்து வீரர்களுக்கு எதிரான நிறவெறி, இனவெறித் தாக்குதலை மன்னிக்க முடியாது என்று அந்த அணியின் மேனேஜர் கரேத் சவுத்கேட் தெரிவித்தார்.
லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதியது. இதில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்ததையடுத்து, பெனால்டி சூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கணக்கில் இத்தாலி அணி வென்று 50 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்றது.
0 கருத்துகள்