Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை: பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது

சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறை காரணமாக கடந்த மூன்று நாட்களாக சென்னையில் தடுப்பூசி போடப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது தடுப்பூசிகள் வந்ததால், சென்னை மாநகராட்சியிலுள்ள 15 மண்டலங்களில் சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12,000 டோஸ் தடுப்பூசிகள் இன்று போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் போடப்படுகிறது. நேரில் வருவோருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 26லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்