சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று பகல்பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. கிண்டி, கோடம்பாக்கம், கோயம்பேடு, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. திருவள்ளூர் நகரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம், திருத்தணி, பூவிருந்தவல்லி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து பூமியை குளிர்வித்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்