Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உத்தராகண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு 

உத்தராகண்ட் மாநில புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி இன்று மாலை பதவியேற்கிறார்.

பாஜக ஆளும் அம்மாநிலத்தில் 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் மக்களவை எம்.பி.யான தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிததத்தை நேற்று முன்தினம் அளித்தார்.

இந்நிலையில் டேராடூனில் மத்திய பார்வையாளர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரின் அழைப்பையடுத்து தாமி இன்று மாலை பதவியேற்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்