Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாராலிம்பிக்: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் அவனி லெகாரா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றார் அவனி லெகாரா.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 621.7 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் அவனி லெகாரா. அதைத்தொடர்ந்து இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார் அவனி. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கத்தை வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்