Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் ஒரேநாளில் 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,523 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,512 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,51,012 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,512ஆக உள்ளது. சென்னையில் நேற்று 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 189 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,921 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 6 பேர்.

image

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,850ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,725 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,63,101 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பாராலிம்பிக் : உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்