Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'கருணாநிதி படத்திறப்புக்கு இபிஎஸ்-க்கு தொலைபேசியில் நானே அழைப்புவிடுத்தேன்' : துரைமுருகன்

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவிற்க்கு இபிஎஸ்-க்கு முறைப்படி தொலைபேசியில் அழைப்புவிடுத்தோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்க்கு அதிமுக சார்பில் அழைப்பிதழ் மட்டுமே அனுப்பப்பட்டது, தொலைபேசியில் அழைக்கவில்லை.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்புக்கு முறைப்படி அழைக்காததாலேயே திமுக பங்கேற்கவில்லை.

ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பியதுடன், முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி எடப்பாடி பழனிசாமியை நானே தொலைபேசியில் அழைத்தேன். வாழ்த்துரையில் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இடம்பெறவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். ஆனால், விழாவில் பங்கேற்கவில்லை என்று அவைச் செயலாளரிடம் அவர்கள் தெரிவித்து விட்டனர்” என தெரிவித்தார்

ஜெயலலிதா படத்திறப்பை திமுக புறக்கணித்ததால் கருணாநிதி படத்திறப்பில் அதிமுக பங்கேற்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்