Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய ஹாக்கி அணியால் நாடே பெருமை கொள்கிறது - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஹாக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ”சரித்திர சாதனை. ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் நீங்கா இடம்பெற்ற நாளாக இது அமைந்துள்ளது. நமது ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை நமது நாட்டுக்கு எடுத்து வருவதற்கு வாழ்த்துகள். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைவரின், குறிப்பாக இளைஞர்களின் மனதில் அவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய ஹாக்கி அணியால் நாடே பெருமை கொள்கிறது” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
image
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பதிவில், “இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பாராட்டுகள், இது மிகப்பெரிய நிகழ்வாகும். நாடு முழுவதும் உங்கள் சாதனையால் பெருமை அடைகிறது. இது அவசியம் கிடைக்க வேண்டிய வெற்றி” என வாழ்த்தியுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்