Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா: நேற்றைவிட சற்று குறைந்த பாதிப்பு - புதிதாக 28,326 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,326 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று ஏற்றம், இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன்படி நேற்று 29,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28,326 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது (கேரளாவில் மட்டும் 16,671 பேர்). அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,46,918 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,032 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,02,351 ஆக உயர்ந்துள்ளது. 
 
image
மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,03,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 85,60,81,527 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68,42,786 பேர்) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்