உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டிலின சமுதாயத்தை சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்பு மனு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2021
இதனைப்படிக்க...வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘குலாப்’ புயல் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்