Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினாலே என் ரத்தம் கொதித்துவிடும்: நினைவுகளைப் பகிர்ந்த வீரேந்திர சேவாக்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் விளையாட வேண்டும் என்றாலே என் ரத்தம் கொதித்துவிடும். அதனால்தான் அந்த அணிக்கு எதிராக என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் போட்டியாகும். இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் களத்தில் வசைபாடுவதும், மோதிக் கொள்வதும் என மைதானத்தில் அனல் பறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். அதில் இருநாட்டு வீரர்களுக்கும் நல்லவிதமான அனுபவங்களும், கசப்பான அனுபவங்களும் கிடைத்திருக்கும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்