இந்தியாவில் ஒரேநாளில் 14,306 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 15,906 என பதிவான நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்றைய பாதிப்பை தொடர்ந்து, 3,51,89,774 என்றாகியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 18,762 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்ததை தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,45,67,367 என உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் போக, தற்போது சிகிச்சையில் 1,67,695 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையெடுத்து வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.18% என்றும், உயிரிழப்பு விகிதம் 1.33% என்றும் ஆகியுள்ளது.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் தொடர்ந்து 31-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 443 என்றானதை தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை இந்திய அளவில் 4,54,712 என்றானது. தடுப்பூசியை பொறுத்தவரை, இதுவரை 102.27 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதில் நேற்று ஒரு நாளில் 12,30,720 தடுப்பூசிகள் போடப்பட்டிருந்திருக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்