இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே 24 மணி நேரத்தில் 19,391 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 379 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரியானா மாநிலத்தில் கணக்கில் காட்டப்படாத உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டதாலேயே ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போது வரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 678 பேர் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: நாட்டின் கொரோனா பாதிப்பில் பாதி கேரளாவுடையது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்