டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசப் போவதில்லை. அவருக்குப் புதிய ரோல் அதாவது ஆட்டத்தை முடிக்கும் ஃபினிஷிங் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் எந்தப் போட்டியிலும் இதுவரை சரிவரப் பந்து வீசியதில்லை. ஆஸ்திரேலியத் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசாத நிலையில் ஏன் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுந்தபின் சில போட்டிகளில் பந்து வீசினார். இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தபோதும், ஹர்திக் பாண்டியா சில போட்டிகளில் மட்டுமே பந்து வீசினார்.
0 கருத்துகள்