Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"துவண்டு விடாதீர்கள்... நமக்கான காலம் நிச்சயம் வரும்”- தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தேமுதிக மற்றும் தேமுதிக சார்பில் சுயேட்சையாக நின்ற வேட்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘நமக்கான காலம் நிச்சயம் வரும்’ எனக்கூறி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், அதில் “9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி செல்வி பழனிக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க... மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பு; திமுக - தேமுதிக கூட்டணி அமையுமா? - விஜய பிரபாகரன் பதில்

image

இதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடு பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம், பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம். உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்