Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மலக்குடலில் மறைத்துவைத்து துபாயிலிருந்து மதுரைக்கு தங்கம் கடத்திய இருவர் கைது

துபாயில் இருந்து மதுரைக்கு மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி: வாயின் உட்பகுதியில் மறைத்து 951 கிராம் தங்கம் கடத்தல்: உஸ்பெஸ்கிஸ்தான் பயணிகள் இருவர் கைது

தனியார் விமானத்தில் துபாயில் இருந்து மதுரைக்கு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் குமார், பாலமுருக குமார் ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

image

அதைத்தொடர்ந்து இருவரிடம் இருந்து 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த சுங்கத்துறையினர், கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்