Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எதற்காக யாரை எதிர்த்து போராடுகிறீர்கள்? - போராடும் விவசாயிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

3 வேளாண் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக போராடுகிறீர்கள்? என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், 3 வேளாண் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை மீறி வேளாண் சட்டத்தை யாரும் அமல்படுத்த முடியாது.

The Farmers' Protests Are a Turning Point for India | Time

அப்படியிருக்கும்போது எதற்காக யாரை எதிர்த்து, விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடுகிறார்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை என தெரிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான விசாரணை நடைபெறும்போது, விவசாயிகளின் போராட்டம் ஏன்? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்