Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமைச்சர் சேகர்பாபு மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடந்த தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கொடுங்கையூரில் பண பட்டுவாடா செய்யப்பட்ட வழக்கில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதன் விசாரணைக்கு தடைவிதிக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் வழக்கை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்