Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

தீபாவளி கொண்டாட்டங்களின்போது பட்டாசு விபத்துகள் நிகழும் வாய்ப்புள்ளதால் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி பண்டிகையை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
* பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.
 
* பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
 
* எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது.
 
* குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது.
 
* பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
 
image
* சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
 
* காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும்.
 
* வெற்றுக் கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது.
 
* பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
 
* முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.
 
* மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை எறியக் கூடாது.
 
* சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்