Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“பவானிப்பூரில் வெற்றபெற வைத்த மக்களுக்கு நன்றி; நந்திகிராமில் நான் தோற்றது சதி” - மம்தா

பவானிப்பூரில் எனக்கு வாக்களித்து வெற்றபெற வைத்த மக்களுக்கும், தான் வெற்றிபெற உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மம்தா, “பவானிப்பூரில் எனக்கு வாக்களித்து வெற்றபெற வைத்த மக்களுக்கும், நான் வெற்றிபெற உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி, நந்திகிராமில் நான் தோற்றது ஒரு சதி. பவானிப்பூர் மட்டுமின்றி சம்சர்கன்ஞ் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இரு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும்” என தெரிவித்தார்.

பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலை விட 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த தேர்தலில் மம்தா 84,709 வாக்குகளும், பிரியங்கா 26,320 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனைப்படிக்க...சத்தீஸ்கர் காங்கிரஸில் சலசலப்பு: 35 எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்