Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கனமழை பெய்துவருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்