டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் பத்திரிகையாளர்களை முறைப்படி சந்திக்காமல், பும்ராவை அனுப்பியது சரியல்ல. இது எந்தவிதத்தில் நியாயம் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.
0 கருத்துகள்