Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு இந்திய அணி செல்லுமா? நாளை நடக்கும் பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு

தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டுப் பயணத்துக்கு இந்திய அணி செல்லுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து நாளை நடக்கும் பிசிசிஐ ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவாகும்.

தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 3 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி நடக்கிறது. இந்தப் பயணத்துக்காக மும்பையில் நடந்துவரும் நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டி முடிந்தபின், இந்திய அணி 9-ம் தேதி புறப்பட முடிவு செய்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்