Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"இந்து என்பதில் பெருமை" - பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கனேரியா கண்டனம்

லாகூர்:பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதில் நான் பெருமைகொள்கிறேன். இங்கு மதச்சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல், கோயில்களை சூறையாடுவது நிறுத்தப்பட வேண்டும் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் என பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

கராச்சியில் உள்ள ராஞ்சூர் லைன் பகுதியில் கடந்த 20ம்தேதி இந்து கோயிலை ஒன்றை சிலர் அடித்து சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் முன்னாள்வீரர் டேனிஷ் கனேரியா கடும்கண்டனத்தை ட்விட்டரில் பதவி செய்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்