புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணத்திற்கான வரியை குறைக்கக் கோரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் சந்தானம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் 40 நாட்கள் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம் புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படப்பிடிப்பு கட்டணத்திற்கான வரியை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படப்பிடிப்பிற்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிக்க: பிப்ரவரியில் தொடங்கும் சூர்யா-பாலா படத்தின் படப்பிடிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்