உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியின் இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சரித்திரத்தைப் படைத்துள்ளார் ஸ்ரீகாந்த் கிடாம்பி. ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்‌ஷ்யா சென்னுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வரலாற்றுச் சாதனை படைத்தார். சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ள கிடாம்பி சக வீரரான லக்‌ஷ்யா சென்னை 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். 1 மணி நேரம் 9 நிமிடங்களில் அவர் வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.
0 கருத்துகள்