உலகின் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இப்போது தலைமை பொறுப்பை அலங்கரித்து வருவது இந்தியர்கள்தான். சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, அரவிந்த் கிருஷ்ணா, நிகேஷ் அரோரா, சாந்தனு நாராயண், பரக் அகர்வால், லீனா நாயர் வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் மற்றொரு இந்தியரான ஆனந்த் ஈஸ்வரன்.
Veeam Software நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தின் கம்யூட்டர் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கொலம்பியாவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படித்து முடித்துள்ளார். மைக்ரோசாப்ட் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
“புதிய அத்தியாயத்தை உற்சாகத்துடன் தொடங்குகிறேன். நிறைய கற்கவும் வளரவும் வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்” என ஆனந்த் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்