Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை: அரையிறுதியில் நுழைந்த இந்தியா

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 37 புள்ளி 1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிக்குமார், 7 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 112 என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய வீரர்களில், ஹர்னூர் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

India U19 cricket team

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இந்திய அணி 30 புள்ளி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதையடுத்து வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்