Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆப்கானிஸ்தானுக்கு 3 டன் மருந்துகளை அனுப்பியது இந்தியா

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் மனிதாபிமான அடிப்படையில் 3 டன் மருந்துகளை இந்திய அனுப்பியுள்ளது.

ஆப்கான் மக்களுக்கு உதவ முன்வருமாறு உலக சுகாதார அமைப்பு கோரியிருந்த நிலையில், இந்தியா ஏற்கனவே மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசிகளை அனுப்பியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தான் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

image

இந்த மருந்துகள் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும். மருந்துகளைப் போல, வரும் வாரங்களில் கோதுமை உள்ளிட்ட தானியங்களை வழங்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்