Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரபாடா ராக்கெட் வேகத்தில் சுருண்டது இந்திய அணி: போராடிய கோலி, ஆட்டத்தில் திராவிட்

கேப்டவுன் : ரபாடாவின் துல்லியமான ராக்கெட்வேகப்பந்துவீச்சு, ஆலிவர், ஜேஸனின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தனிஒருவனாகப் போராடிய கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் சேர்த்துள்ளது. மார்க்ரம் 8 ரன்னிலும், கேசவ் மகராஜ் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்