உலகம் முழுக்க கொரோனா தொற்று எண்ணிக்கை எவரெஸ்ட் போல் உயர்கிறது என மருத்துத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 18வது தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போன்று உயர்ந்துள்ளது. உலகளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று 26.06 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்